செல்போன் கடையில் திருட்டு

சிதம்பரத்தில் செல்போன் கடையில் திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-01-31 18:45 GMT

சிதம்பரம்,

சிதம்பரம் அருகே மீதிகுடி பகுதியை சேர்ந்தவர் தேவதாஸ் மகன் ராமன் (வயது 40). இவர் சிதம்பரம் பஸ் நிலையத்தில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் ராமன் தனது கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். இதையடுத்து மீண்டும் கடையை திறக்க நேற்று காலை அவர் வந்தார். அப்போது கடை கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த ரூ.40 ஆயிரம் ரொக்கம் மற்றும் 2 செல்போன்களை காணவில்லை. அதனை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது. இது குறித்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் மற்றும் செல்போன்களை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இதேபோல் சிதம்பரம் 16 கால் மண்டபம் தெருவில் உள்ள ஸ்ரீ ஓம் சக்தி காளியம்மன் கோவிலில் மர்மநபர்கள் திருட முயற்சி செய்த சம்பவமும் நடந்துள்ளது. இது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்