3 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு
மாவட்டத்தில் 3 இடங்களில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
ஸ்ரீவில்லிபுத்தூர்,
மாவட்டத்தில் 3 இடங்களில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் நந்தவனப்பட்டி தெருவை சேர்ந்தவர் காஜா மைதீன் (வயது 62). இவர் தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார்.
பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் காணவில்லை. இதுகுறித்து நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல சாத்தூர் அருகே உள்ள நள்ளிச்சத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (45). இவர் மாட்டு வியாபாரம் செய்து வருகிறார். இவர் சம்பவத்தன்று சாத்தூரில் மாடு வாங்கிவிட்டு இரவு வீட்டு வாசலில் இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தூங்க சென்றார். பின்னர் மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தை காணவில்லை. இதுகுறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் பாத்திமா நகரை சேர்ந்தவர் விஜயகுமார் (53). இவர் தனது இரு சக்கர வாகனத்தை வீட்டு முன்புநிறுத்திவிட்டு ராமேசுவரம் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றார். பின்னர் வீடு திரும்பிய போது வீட்டு முன்பு நிறுத்தியிருந்த இரு சக்கர வாகனம் மாயமானது தெரியவந்தது.
இதுபற்றி அவர் கொடுத்த புகாரின் பேரில் இந்நகர் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.