வடுக பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

சிவபுரிபட்டியில் வடுக பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

Update: 2022-07-21 17:13 GMT

சிங்கம்புணரி, 

சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டியில் அமைந்துள்ள சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட தர்மஷம்வர்ஷினி உடனுறை தான்தோன்றீஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள வடுக பைரவருக்கு ஆடி மாத தேய்பிறை அஷ்டமி நாளில் சிறப்பு யாகம் நடைபெற்றது. கோவில் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டு சிறப்பு வேள்விகள் நடைபெற்றது. கோவில் குருக்கள், ரவி குருக்கள் தலைமையில் சிறப்பு யாகம் நடைபெற்றது. தொடர்ந்து வடுக பைரவருக்கு 21 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மலர் மாலைகளுடன் மகா தீபம் காட்டப்பட்டது. பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு வடுக பைரவரை தரிசித்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்