உங்கள் புகழைக் காலம் சுமந்து செல்லும் - கவிஞர் வைரமுத்து டுவீட்

ராணி எலிசபெத் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-10 03:17 GMT

சென்னை,

பிரிட்டன் ராணி எலிசபெத் மறைவுக்கு பல்வேறு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ராணி மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்து தன்னுடைய டுவீட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறும்போது,

"எழுபது ஆண்டுகள் அரசாண்ட முதல் அரசி, 17 பிரதமர்கள் கண்ட முதல் மகாராணி, ராஜ குடும்பத்தின் முதல் பொறி நெறியாளர், ராணுவப் பணி செய்த முதல் அரண்மனைப் பெண்,

அரசி எனில் தானே என உலகை உணரவைத்த முதல் ராணி, உங்களோடு கை குலுக்கியது என் உள்ளங்கைப் பெருமை, உங்கள் புகழைக் காலம் சுமந்து செல்லும்". இவ்வாறு தன்னுடைய டுவீட்டரில் கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்