2024-25ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி..!

குரூப் 1, குரூப் 4 காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வுக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என தேர்வுக்கு தயாராகி இருந்தவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.

Update: 2023-12-20 13:22 GMT

சென்னை,

தமிழ்நாடு அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) தேர்வு செய்து வருகிறது. நடப்பு ஆண்டில் அறிவிக்கப்படாமல் உள்ள குரூப் 1, குரூப் 4 காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வுக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என தேர்வுக்கு தயாராகி இருந்தவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.

இந்த நிலையில், 2024-25ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி இன்று அறிவித்துள்ளது. அதன்படி, குரூப் - 4 தேர்வுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் (ஜனவரியில்) வெளியிடப்பட்டு ஜூன் மாதம் தேர்வு நடத்தப்படும் எனவும், குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு மே மாதம் வெளியிடப்பட்டு ஆகஸ்ட் மாதம் தேர்வு நடத்தப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

குரூப் - 1 தேர்வுக்கான அறிவிக்கை அடுத்தாண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, ஜூலையில் தேர்வு நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்