புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

நெல்லை அருகே புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-12-03 20:59 GMT

தாழையூத்து:

நெல்லை அருகே உள்ள தாழையூத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்லதங்கம் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள மேல்நிலைப்பள்ளி அருகே நின்று கொண்டிருந்த சங்கர்நகரை சேர்ந்த மாரி (வயது 33) என்பவரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அதில் அவர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரியை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1,500 மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்