புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

ரிஷிவந்தியம் அருகே புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டாா்.

Update: 2023-04-30 18:45 GMT

ரிஷிவந்தியம்:

ரிஷிவந்தியம் சப்-இன்ஸ்பெக்டர் துர்காதேவி தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ரிஷிவந்தியம் காமராஜர் தெருவை சேர்ந்த அப்துல்வகாப் மகன் அப்துல்பரித் (வயது 60) என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றுக்கொண்டிருந்தார். உடனே அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த 5 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்