கனமழை காரணமாக வால்பாறையில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை..!
கோவை மாவட்டம் வால்பாறையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது
வால்பாறை,
கோவை மாவட்டம் வால்பாறையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது .வால்பாறையில் தென்மேற்கு பருவமழை விட்டுவிட்டு கனமழையாக பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் வால்பாறை தாலுகாவில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்தது மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்