அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
மேகமலை அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.;
கடமலைக்குண்டு அருகே உள்ள மேகமலை அருவிக்கு விடுமுறை தினத்தையொட்டி நேற்று, தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குவிந்தனர். அவர்கள் குடும்பத்துடன் அருவியில் குளித்து மகிழ்வதை படத்தில் காணலாம்.