மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்
அரக்கோணம் அருகே மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.;
அரக்கோணத்தை அடுத்த பள்ளூர் கிராமத்தில் மணல் கடத்துவதாக கிடைத்த தகவலின் பேரில் அரக்கோணம் தாசில்தார் சண்முகசுந்தரம் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வாட்டர் பம்ப் ஹவுஸ் அருகே டிராக்டரில் மணல் கடத்தி வந்தவர்கள் தாசில்தாரை கண்டதும் டிராக்டரை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடினர்.
இதனையடுத்து தாசில்தார் சண்முகசுந்தரம் டிராக்டரை பறிமுதல் செய்து, நெமிலி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.