மரத்தில் மொபட் மோதி வியாபாரி பலி

மரத்தில் மொபட் மோதி வியாபாரி உயிரிழந்தார்.

Update: 2023-08-12 19:00 GMT

காரைக்குடி

காரைக்குடி செஞ்சை பாப்பா ஊருணி பகுதியைச் சேர்ந்தவர் நாகூர் கனி (வயது 51) இவர் பழைய துணி வியாபாரம் செய்து வந்தார். இவர் தனது மொபட்டில் காரைக்குடி மாவட்ட தலைமை மருத்துவமனை அருகே சென்றார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த மொபட் சாலையோரம் உள்ள மரத்தில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து காரைக்குடி வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்