பணியின் போது உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி
தியாகதுருகத்தில் பணியின் போது உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தியாகதுருகம்,
தியாகதுருகம் தீயணைப்பு நிலையத்தில் பணியின் போது உயிர் இழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு தீயணைப்பு நிலைய அலுவலர் கவிதா தலைமை தாங்கி பணியின் போது உயிரிழந்த வீரர்களின் உருவப்படத்திற்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதில் தீயணைப்பு வீரர்கள் ராஜா, கார்த்திகேயன், தீயணைப்பு நிலைய டிரைவர்கள் சிவஞானம், அருணாச்சலம் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.