தூத்துக்குடி: பள்ளியில் புகுந்து ஆசிரியர்களை ஓட ஓட விரட்டி அடித்த மாணவனின் குடும்பத்தார்...!

பள்ளியில் புகுந்து ஆசிரியர்களை ஓட ஓட விரட்டி அடித்த மாணவனின் தாய், தந்தை, தாத்தாவை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-03-22 10:09 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடி அருகே கீழநம்பிபுரத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிபவர் பாரத். இவரை, அப்பள்ளியில் 2ம் வகுப்பு படிக்கும் மாணவரின் பெற்றோர் மற்றும் தாத்தா-பாட்டி ஆகியோர், ஓட ஓட விரட்டி தாக்கி உள்ளனர்.

அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் குருவம்மாளையும் இவர்கள் தாக்கி உள்ளனர். மேலும், பள்ளியின் மேஜை மற்றும் நாற்காலிகளையும் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.

இது தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து மாணவனின் தந்தை சிவலிங்கம், தாய் செல்வி, தாத்தா முனியசாமி மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து எட்டயபுரம் போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அந்த மாணவர் வீட்டுப்பாடம் செய்யாததைக் கண்டித்ததால் ஆசிரியர் பாரத் தாக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இந்நிலையில், 3 பேரையும் நீதிபதி முன் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.



Tags:    

மேலும் செய்திகள்