அடையாளம் தெரியாத ஆண் பிணம்

அடையாளம் தெரியாத ஆண் பிணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2023-10-05 23:52 IST

 கரூரில் உள்ள மதுரை-சேலம் பைபாஸ் சர்வீஸ் ரோடு பகுதியில் அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக கரூர் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து கரூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்