அடையாளம் தெரியாத ஆண் பிணம்

கல்வராயன்மலையில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது. கொலையா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-10-15 18:45 GMT

கச்சிராயப்பாளையம்

கல்வராயன்மலை தரிசு காடு அருகே உள்ள நக்க வளவு செல்லும் ஒத்தையடி மலைப்பாதையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் எதுவும் தெரியவில்லை? இதை பார்த்த அப்பகுதி மக்கள் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் கரியாலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவரை யாரேனும் கொலை செய்து உடலை காட்டில் வீசி சென்றனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்