அடையாளம் தெரியாத ஆண்பிணம்

அடையாளம் தெரியாத ஆண்பிணம் யார் அவர்? போலீசார் விசாரணை

Update: 2022-11-23 18:45 GMT

சீர்காழி:

சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கடற்கரையில் நேற்று 35 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கரை ஒதுங்கியது. இதுகுறித்து மீனவர்கள் கொடுத்த புகாரின் பேரில் சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்