அடையாளம் தெரியாத முதியவர் பிணம்

அடையாளம் தெரியாத முதியவர் பிணம் கைப்பற்றப்பட்டது.

Update: 2022-07-31 18:53 GMT

கரூர் அருகே உள்ள வீரராக்கியம் ரெயில்வே நிலைய நடைமேடையில் 75 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் இறந்து கிடப்பதாக கரூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ரெயில்வே போலீசார் இறந்த முதியவரின் உடலை கைப்பற்றி கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்