வாகனம் மோதி வாலிபர் பலி

தஞ்சை-திருச்சி சாலையில் வாகனம் மோதி வாலிபர் உயிரிழந்தார்;

Update:2022-06-28 01:48 IST
தஞ்சை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புதுக்குடியில் இருந்து தஞ்சை செல்லும் சாலையில் நேற்று முன்தினம் இரவு 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக தஞ்சை நோக்கி வந்த ஏதோ ஒரு வாகனம் நடந்து சென்ற வாலிபர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த செங்கிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சாலை விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தில் பலியான வாலிபர் யார்?, எந்த ஊரை சோ்ந்தவா்?, அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் எது? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.





Tags:    

மேலும் செய்திகள்