வேளாங்கண்ணி ஆலய தேர் பவனி

கடமலைக்குண்டுவில் உள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் நேற்று தேர்பவனி நடைபெற்றது

Update: 2023-10-01 20:45 GMT

கடமலைக்குண்டுவில் உள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் 36-ம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று தேர்பவனி மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பங்கு தந்தை குணசேகரன் ராஜய்யா தலைமை தாங்கி, தேர்பவனியை தொடங்கி வைத்தார். தேவாலயத்தில் இருந்து மாதாவின் சொரூபத்துடன் தேர்பவனி புறப்பட்டது. கடமலைக்குண்டு, கரட்டுப்பட்டி மூல வைகை ஆற்று பாலம் வரை சென்ற தேர்பவனி, அதன்பிறகு மீண்டும் தேவாலயத்தில் முடிவடைந்தது. இந்த தேர்பவனியில் கடமலைக்குண்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். அப்போது அவர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி மாதாவை வழிபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்