விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கை திரும்ப பெற அனுமதி - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கை திரும்ப பெற அனுமதி அளித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-03-08 15:09 GMT

சென்னை,

தமிழ்நாடு முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது, கடந்த 2016-ம் ஆண்டு சென்னையில் மழை வெள்ளம் ஏற்பட்டது. இதுகுறித்து தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கருத்து தெரிவித்தார். இதையடுத்து, முதல்-அமைச்சர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக விஜயகாந்த் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்தநிலையில் தமிழ்நாட்டில் தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் தலைவர்கள் மீதான அவதூறு வழக்குகளை திரும்ப பெற்று கடந்த ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கை திரும்ப வாபஸ் பெற எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, அவதூறு வழக்குகளை வாபஸ் பெற ஐகோர்ட்டு அனுமதி பெற வேண்டும் என்று சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது. இதன்படி, சென்னை ஐகோர்ட்டில் நகர குற்றவியல் வக்கீல் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி. பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்த போது, விஜயகாந்த் மீதான வழக்கு நிதி சம்பந்தப்பட்டது அல்ல. அவதூறு வழக்கு என்பதால் அதை திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும் என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கை வாபஸ் பெற அனுமதி அளித்து உத்தரவிட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்