மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

சங்கரன்கோவிலில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Update: 2023-05-31 19:00 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் உதவி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் முகாம் நடைபெற்றது. 13 மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை உதவி கலெக்டர் சுப்புலட்சுமி வழங்கினார். இதில் நேர்முக உதவியாளர் செல்வகுமார், சங்கரன்கோவில் வருவாய் வட்டாட்சியர் பழனிவேல்சாமி, திருவேங்கடம் வருவாய் வட்டாட்சியர் பரமசிவன், சிவகிரி வருவாய் வட்டாட்சியர் ஆனந்த், திருவேங்கடம் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் திருமலைச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்