கிணறு தூர்வாரும் பணி

இட்டமொழி அருகே விஜயஅச்சம்பாடு கிராமத்தில் கிணறு தூர்வாரும் பணி நடந்தது.;

Update:2023-06-25 01:05 IST

இட்டமொழி:

இட்டமொழி பஞ்சாயத்து விஜயஅச்சம்பாட்டில் பொதுமக்களுக்கு கடும் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்த குடிநீர் பற்றாக்குறையை போக்க அங்குள்ள நல்லதண்ணீர் கிணற்றை தூர்வாரும் பணி நேற்று தொடங்கியது. கோவில் தர்மகர்த்தா கே.முத்துக்கிருஷ்ணன் மற்றும் ஊர் பிரமுகர்கள் சுப்பிரமணியன், வெள்ளத்துரை, கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்