மத்தூர்:-
மத்தூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கிருஷ்ணகிரி சாலையில் சந்தேகப்படும்படியாக நின்ற பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த பெண் கிருஷ்ணகிரி சாலையை சேர்ந்த அஸ்நாத்பீ (வயது 57) என்பது தெரிய வந்தது. உடனே போலீசார் அவரிடம் இருந்து 275 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன் அவரையும் கைது செய்தனர்.