கே.கே.நகர், ஜூலை.23-
திருச்சி, எடமலைப்பட்டி புதூர் போலீசார் நேற்று ராம்ஜி நகர், மில் காலனி, கோனார் குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த முத்துராமன் மனைவி நந்தினி (வயது 42) என்பவர் கஞ்சா விற்றுக்கொண்டிருந்தார். போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.