விஷம் குடித்து பெண் தற்கொலை

மூங்கில்துறைப்பட்டு அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை

Update: 2023-01-14 18:45 GMT

வடபொன்பரப்பி

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள புளியங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ராமசாமி மனைவி மஞ்சுளா(வயது 46). கடந்த சில தினங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த இவர் சம்பவத்தன்று விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி மஞ்சுளா பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீஸ் இன்ஸ்பெக்டர் மாணிக்கம் வழக்குப்பதிவு செய்து மஞ்சுளாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்