விஷம் குடித்து பெண் தற்கொலை

விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-04-13 17:03 GMT

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா சுருட்டல் கிராமம் ரோடு தெருவை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவரது மனைவி ரதிகலா (வயது 35). இவர், வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.

இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ரதிகலா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்