பஸ் மோதி பெண் பலி

காட்டுமன்னார்கோவில் அருகே பஸ் மோதி பெண் பலி

Update: 2022-12-16 18:45 GMT

காட்டுமன்னார்கோவில்

காட்டுமன்னார்கோவில் அருகே விளாகம் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம் மனைவி கல்யாணி(வயது 60). இவர் நேற்று முன்தினம் காலை நெடுஞ்சேரி கிராமத்துக்கு செல்வதற்காக டி.மணலூர் பஸ் நிறுத்தத்தில் தனியார் பஸ்சில் ஏறுவதற்காக சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த இன்னொரு தனியார் பஸ் கல்யாணி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான தனியார் பஸ் டிரைவரான குமராட்சி அருகே வரகூர்பேட்டையை சேர்ந்தகுமார்(48) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்