மோட்டார் சைக்கிள்கள் மோதி பெண் பலி

பழனி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் பெண் பலியானார்.

Update: 2023-09-24 21:15 GMT

பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 42). அவருடைய மனைவி பார்வதி (38). நேற்று இரவு இவர்கள் 2 பேரும், நெய்க்காரப்பட்டியில் இருந்து பழனிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். நெய்க்காரப்பட்டியை அடுத்த தனியார் மில் அருகே மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், இவர்கள் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கீழே விழுந்ததில் பாலமுருகன், பார்வதி ஆகியோா் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பழனி தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் காயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பார்வதி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்