விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

நாகர்கோவிலில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-08-07 18:45 GMT

நாகர்கோவில்

நாகர்கோவிலில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

நாகர்கோவில் ராமன்புதூரை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 54), கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பவனின்றி அய்யப்பன் பரிதாபமாக இருந்தார். அய்யப்பன் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாகவும், இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து நேசமணிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்