விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

கருங்கல் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

Update: 2023-09-02 18:45 GMT

கருங்கல், 

கருங்கல் அருகே தாழக்கன்விளையைச் சேர்ந்தவர் ஜோஸ் சுபினோ (வயது 36), தொழிலாளி. திருமணம் ஆகாத இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த ஜோஸ் சுபினோ ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீட்டுக்கு திரும்பினார். உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்ட ஜோஸ் சுபினோ சம்பவத்தன்று விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜோஸ் சுபினோ பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஜோஸ் சுபினோவின் தந்தை தபசிமுத்து கொடுத்த புகாரின் பேரில் கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்