விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

கொளப்பள்ளியில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2023-05-31 19:45 GMT

பந்தலூர்

பந்தலூர் தாலுகா கொளப்பள்ளி அருகே பாரத் நகரை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 24). கூலித்தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். அதற்கு பல இடங்களில் சிகிச்சை பெற்றும் பலன் அளிக்கவில்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த விஜயகுமார் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி விஜயகுமார் இறந்தார். இதுகுறித்து சேரம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்