கடலூர் முதுநகரில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

கடலூர் முதுநகரில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.

Update: 2023-05-11 19:03 GMT

கடலூர் முதுநகர், 

கடலூர் முதுநகர் பீமாராவ் நகரை சேர்ந்தவர் சீனு (வயது 53), கூலி தொழிலாளி. உடல் நலம் சரியில்லாத இவர், சம்பவத்தன்று விஷத்தை குடித்து விட்டார். இதில் மயங்கி விழுந்த சீனுவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே சீனு இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்