தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

வந்தவாசி அருகே விவசாய கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-02-06 12:42 GMT

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த கல்பட்டு கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 55), விவசாய கூலித் தொழிலாளி. இவர், விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.

உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சுப்பிரமணியை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்க்கொடுங்காலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்