திருமணமாகாத ஏக்கத்தில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை

நெல்லிக்குப்பத்தில் திருமணமாகாத ஏக்கத்தில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-05-29 19:05 GMT

நெல்லிக்குப்பம், 

நெல்லிக்குப்பம் குடிதாங்கி சாவடியை சேர்ந்தவர் ஆனந்தகுமார்(வயது 37). வெல்டிங் தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் அவர் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று ஆனந்தகுமார், வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தன் மீது ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

இதில் பலத்த தீக்காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஆனந்தகுமார், பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்