எட்டயபுரம் அருகே தொழிலாளி தற்கொலை

எட்டயபுரம் அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-09-12 18:45 GMT

எட்டயபுரம்:

எட்டயபுரம் அருகே உள்ள கீழஈரால் ஆர்.சி. தெருவை சேர்ந்த ரோஸ் மகன் சகாயராஜ் (வயது 49). இவர் ஒரு தனியார் மில்லில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு அடிக்கடி வயிற்று வலி இருந்து வந்ததாகவும், அதற்காக மருந்து, மாத்திரை சாப்பிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் வயிற்று வலி குறையாததால் அவர் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் வீட்டுக்கு பின்புறம் உள்ள தாழ்வாரத்தில் நூல் கயிற்றில் தூக்கு மாட்டி தொங்கியுள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு எட்டயபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால், அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் எட்டயபுரம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி, பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்