சரக்கு வாகனம் மோதி தொழிலாளி பலி

சாயல்குடி அருகே சரக்கு வாகனம் மோதி ெதாழிலாளி பலியானார்.

Update: 2022-09-22 18:45 GMT

சாயல்குடி,

அசாம் மாநிலம் மோரிகான் மாவட்டத்தை சேர்ந்தவர் திவாங்கர் தேக்கா (வயது 24). அதே பகுதியைச் சேர்ந்தவர் ஓரா பாப்பு (25). இவர்கள் இருவரும் சாயல்குடியில் தங்கி கூலி தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு சாயல்குடி அருகே உள்ள உறைக்கிணறு கிராமத்தில் இருந்து இருவரும் மோட்டார் சைக்கிளில் சாயல்குடி நோக்கி வந்து கொண்டிருந்தனர் அப்போது தூத்துக்குடியில் இருந்து சாயல்குடி நோக்கி வந்த சரக்கு வாகனம், ேமாட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் திவாங்கர் தேக்கா படுகாயம் அடைந்தார். அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலின் பேரில் சாயல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா, சப்-இன்ஸ்பெக்டர் சால்மோன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து உறைக்கிணறு கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் மோகன்தாஸ் (40) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்