ஆட்டோ மோதி தொழிலாளி பலி

தூத்துக்குடியில் ஆட்டோ மோதி தொழிலாளி பலியானார்.

Update: 2023-08-17 18:45 GMT

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி. ஸ்பிக்நகர் அருகே உள்ள எம்.சவேரியார்பும் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில் (வயது 43). இவர் வெல்டிங் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இவர் தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் எம்.சவேரியார்புரம் அருகே நடந்து சென்றபோது அந்த வழியாக வந்த ஆட்டோ அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த செந்திலை அங்கிருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த செந்திலுக்கு உமா மகேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்