திருமணமான 9 மாதத்தில் இளம் பெண் மர்மச்சாவு

ஆம்பூர் அருகே திருமணமான 9 மாதத்தில் இளம் பெண் மர்மமான முறையில் இறந்தார்.;

Update:2023-09-20 23:32 IST

ஆம்பூர் டவுன் ராமர் கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தர். ஆம்பூர் தாலுகா அலுவலகம் அருகே கம்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார். இவரது மனைவி தரணி (வயது 23). இவர்களுக்கு திருமணமாகி 9 மாதங்கள் ஆகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தரணி மர்மமான முறையில் தூக்கில் பிணமாக கிடந்தார். இது குறித்து தகவலறிந்ததும் ஆம்பூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருமணமாகி 9 மாதங்களே ஆவதால் வாணியம்பாடி சப்- கலெக்டர் பிரேமலதா விசாரணை நடத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்