மொபட் திருடிய வாலிபர் கைது

மொபட் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்

Update: 2022-10-27 21:35 GMT

நெல்லை:

நெல்லை வண்ணார்பேட்டை தெற்கு பைபாஸ் சாலையில் வெளிமாவட்டங்களை சேர்ந்த சிலர் தங்கி இருந்து பீங்கான் பொருட்களை விற்பனை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி பீங்கான் பொருட்கள் வியாபாரியான திருவாரூரை சேர்ந்த பாண்டியன் (வயது 40) என்பவரின் மொபட்டை மர்மநபர் திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் வண்ணார்பேட்டை கோடீஸ்வரன்நகரை சேர்ந்த ராமர் மகன் சிவராஜ் (26) என்பவர் மொபட்டை திருடி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து மொபட் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்