விழுப்புரம் அருகேதூக்குபோட்டு வாலிபர் தற்கொலை

விழுப்புரம் அருகே தூக்குபோட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டாா்.

Update: 2023-08-06 18:45 GMT


விழுப்புரம் அருகே ஆலாத்தூர் முல்லை தெருவை சேர்ந்தவர் பூங்காவனம் மகன் ராஜசேகரன் (வயது 33). இவர் காடை பண்ணை வைத்துள்ளார். திருமணம் ஆகாதவர். தனக்கு திருமணம் ஆகவில்லையே என்ற ஏக்கத்தில் அவர் இருந்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது சகோதரர் ராஜேஷ் அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்