தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

விக்கிரவாண்டி அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்துகொண்டாா்.

Update: 2023-03-18 18:45 GMT

விக்கிரவாண்டி:

விக்கிரவாண்டி அருகே உள்ள தென்னவராயன்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வசந்தராஜ்(வயது 32). இவர் வீட்டில் தனியாக இருந்தபோது சேலையால் தூக்குப்போட்டுக்கொண்டார். அவரை உறவினர்கள் மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வசந்தராஜ் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து வசந்தராஜ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்