மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

சிறுபாக்கம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

Update: 2023-05-05 18:45 GMT

சிறுபாக்கம்

சிறுபாக்கம் அடுத்த அடரி கிராமத்தை சேர்ந்தவர் இளவரசன்(வயது 25). இவர் வாட்டர் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை இளவரசன் வாட்டர் சர்வீஸ் சென்டரில் மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கு வாட்டர் சர்வீஸ் செய்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் எந்திரத்தில் இருந்து இளவரசன் மீது மின்சாரம் பாய்ந்து தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டா்கள் இளவரசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சிறுபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்