சிறுமிகள் பாலியல் பலாத்காரம் 2 தமிழர்களுக்கு இங்கிலாந்தில் சிறைதண்டனை

இங்கிலாந்தில் சிறுமிகள் மீது பாலியல் தாக்குதல் நடத்திய குற்றங்களுக்காக இரண்டு தமிழர்களுக்கு அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Update: 2017-05-16 12:13 GMT


இங்கிலாந்து நாட்டில் உள்ள வல்லசி  நகரை சேர்ந்த இளவரசன் (26) என்பவரும் விகன் நகரை சேர்ந்த வினோதன் ராஜேந்திரன் (27) என்பவரும் சகோதரர்கள் ஆவர்.

தமிழர்களான இருவரும் கடந்த 2010 முதல் 2016-ம் ஆண்டு வரை வால்டன் மற்றும் கார்ஸ்டன்  நகரங்களில் உள்ள வணிக  மையங்களில் பணிபுரிந்து வந்துள்ளனர்.

இந்த காலக்கட்டத்தில் இவர்களது கடைகளுக்கு வந்த சிறுமிகளிடம் அன்பாகவும், பாசமாகவும் இருப்பது போல் நடித்து உள்ளனர்.

சிறுமிகளுக்கு இலவசமாக இனிப்புகள், அவர்களது செல்போன்களுக்கு இலவசமாக ரீ-சார்ஜ் செய்வது உள்ளிட்ட உதவிகளை செய்து அவர்களை கவர்ந்து உள்ளனர்.

சகோதர்கள் மீது நம்பிக்கை கொண்ட 9 சிறுமிகள் அவர்களது கடைகளுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர். சிறுமிகளுடன் இருவரும் அடிக்கடி வெளியே சென்று பொழுதை கழித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், 14 மற்றும் 15 வயதுடைய சிறுமிகளை சகோதரர்கள் இருவரும் காரில் அழைத்துச்சென்றுள்ளனர். ஆட்கள் நடமாட்டம் இல்லாத குடியிருப்பு ஒன்றிற்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு மதுவை ஊற்றி கொடுத்துள்ளனர்.

பின்னர், மதுபோதையில் இருந்த சிறுமிகளுடன் சகோதரர்கள் இருவரும் பாலியல் பலாத்காரம்ச் எய்து உள்ளனர்.

இவ்விவகாரம் வெளிச்சத்திற்கு வந்த நிலையில், இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

இது குறித்த வழக்கின் இறுதி விசாரணை லிவர்பூல் நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. அப்போது, சிறுமிகளை பாலியல் ரீதியாக தாக்குவதற்காகவே அவர்களிடம் நண்பர்களை போல் இருவரும் நடித்து வந்துள்ளனர்.

இருவரின் குற்றங்களும் மன்னிக்க முடியாதது. எனவே, முதன்மை குற்றவாளியான இளவரசனுக்கு 22 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்களும், இரண்டாவது குற்றவாளியான வினோதனுக்கு 18 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் சிறை தண்டனை விதிப்பதாக நீதிபதி அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

மேலும் செய்திகள்