ஆப்கானிஸ்தான் ராணுவ தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 வீரர்கள் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் ராணுவ தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 வீரர்கள் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2017-05-23 09:19 GMT

கான்பூர்,


ஆப்கானிஸ்தானில் கந்தகார் மாகாணத்தில் ராணுவ தளத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் 10 ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 9 ராணுவ வீரர்கள் காயம் அடைந்து உள்ளனர் என அந்நாட்டு ராணுவம் வெளியிட்டு உள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சமீப காலமாக தலிபான் பயங்கரவாதிகள் வெளிநாட்டு படைகளை குறிவைத்து தாக்குதல் நடத்துவது அதிகரித்து காணப்படுகிறது.

மேலும் செய்திகள்