டொனால்டு டிரம்ப் முகமூடியை அணிந்து கொண்டு ஏடிஎம்-யை கொள்ளையடித்த வாலிபர்கள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் முகமூடியை அணிந்து கொண்டு இத்தாலியை சேர்ந்த இருவர் கொள்ளையடித்த சம்பவம் நடந்துள்ளது.

Update: 2017-07-26 05:15 GMT
இத்தாலியின் டூரின் ஒரு ஏடிஎம் கொள்ளையடிக்கபட்டு உள்ளது. சுமார் 27 மற்றும் 31 வயது மதிக்கத்தக்க இருவர் 20 ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து 1 லட்சம் யூரோவை கொள்ளையடித்துள்ளனர்.

இவர்கள் இருவரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் முகமூடியை அணிந்து கொண்டு கொள்ளையடித்துள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்களே குற்றவாளிகள் என்பது தெரியவந்தது.

மேலும் செய்திகள்