ஆப்கானிஸ்தானில் போலீஸ் பயிற்சி மையம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் 15 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் போலீஸ் பயிற்சி மையம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 15 பேர் உயிரிழந்தனர்.

Update: 2017-10-17 09:57 GMT

கோஸ்ட், 


கோஸ்ட் மாகாணத்தில் போலீஸ் பயிற்சி மையம் மீது பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல், துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதில் 15 பேர் பலியாகினர். 40 பேர் காயம் அடைந்து உள்ளனர் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. உயிரிழந்தவர்களில் பெண்கள், மாணவர்கள் மற்றும் போலீசும் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீஸ் பயிற்சி மையம் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டனரா என்பது குறித்தான தகவல்கள் வெளியாகி உள்ளது. 

மேலும் செய்திகள்