நைஜீரியாவில் 4 வருடங்களுக்கு முன் கடத்திய பள்ளி மாணவிகளின் வீடியோவை வெளியிட்ட தீவிரவாதிகள்

நைஜீரியாவில் 4 வருடங்களுக்கு முன் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகளை பிடித்து வைத்திருக்கும் வீடியோ ஒன்றை போகோ ஹரம் தீவிரவாத அமைப்பு இன்று வெளியிட்டுள்ளது.#BokoHaram

Update: 2018-01-15 13:04 GMT

லாகோஸ்,

நைஜீரியாவின் வடகிழக்கே சிபோக் நகரில் கடந்த 2014ம் ஆண்டு ஏப்ரலில்  270 பள்ளி மாணவிகள் கடத்தப்பட்டனர்.  அவர்களை போகோ ஹரம் என்ற தீவிரவாத அமைப்பு கடத்தி சென்றது.

இந்த நிலையில், கடத்தப்பட்ட பள்ளி மாணவிகளில் 12 பேர் தொடர்ந்து தீவிரவாதிகளின் பிடியில் இருந்து வருகின்றனர்.  அவர்களை பிடித்து வைத்திருப்பது போன்ற 21 நிமிட வீடியோ ஒன்றை போகோ ஹரம் தீவிரவாதிகள் இன்று வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோவில், நாங்கள் சிபோக் நகர பள்ளி மாணவிகள்.  திரும்பி வரவேண்டும் என எங்களுக்காக நீங்கள் அழுது கொண்டிருக்கும் ஒரு சிலரில் உள்ளவர்கள் நாங்கள்.  அல்லாவின் கருணையால், நாங்கள் இதுவரை திரும்பி வரவேயில்லை என ஒரு மாணவி கூறியுள்ளார்.

#BokoHaram || #latesttamilnews | #Nigeria

மேலும் செய்திகள்