தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்கு நீதி கேட்டு லண்டனில் இன்று ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்கு நீதி கேட்டு, லண்டனில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

Update: 2018-09-30 22:15 GMT
லண்டன்,

தூத்துக்குடியில் வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே மாதம் நடந்த போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கேட்டு, இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள வேதாந்தா குழும அலுவலகத்தின் முன் இன்று(திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்த ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.

வேதாந்தா குழும அலுவலகத்தில் ஆண்டு பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற இருப்பதையொட்டி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

மேலும் செய்திகள்