ஜிம்பாப்வேயில் தனியார் விமானம் விபத்தில் சிக்கி 5 பேர் பலி

ஜிம்பாப்வேயில் தனியார் விமானம் விபத்தில் சிக்கியதில் 2 வர்த்தக உயர் அதிகாரிகள் உள்பட 5 பேர் பலியாகி உள்ளனர்.

Update: 2018-11-25 07:17 GMT
ஹெல்சின்கி,

தென்னாப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயில் தனியார் விமானம் ஒன்று பறந்து சென்று கொண்டிருந்தது.  ஜிம்பாப்வே நாட்டு விமானி ஓட்டி சென்ற அதில் மொத்தம் 5 பேர் பயணம் செய்தனர்.

இந்த நிலையில், வேட்டை சுற்றுலாவுக்காக சென்றிருந்த அவர்களது விமானம் விபத்திற்குள்ளானது.  இதில் 5 பேரும் பலியாகினர்.

அவர்களில் பின்லாந்து நாட்டின் காகித ஆலை ஒன்றின் இயக்குநர் ஹெய்கி வப்புலா மற்றும் சேவை நிறுவனம் ஒன்றின் தலைமை செயல் அதிகாரி ஆகிய 2 பேரும் அடங்குவர்.  மற்ற 2 பேர் பின்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள்.

இந்த சம்பவத்திற்கு பின்லாந்து பிரதமர் ஜுஹா சிபிலா மற்றும் வெளியுறவு துறை மந்திரி திமோ சொய்னி இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்