தேர்தலுக்கு முன் பதவி விலகிவிடுவேன்: இங்கிலாந்து பிரதமர் தெரசா மே

2022 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு முன் பதவி விலகிவிடுவேன் என்று இங்கிலாந்து பிரதமர் தெரசா மே தெரிவித்துள்ளார்.

Update: 2018-12-13 13:24 GMT
லண்டன், 

பொதுத் தேர்தலுக்கு முன் பதவி விலகிவிடுவேன் என்று இங்கிலாந்து பிரதமர் தெரசா மே தெரிவித்துள்ளார். பிரஸ்சல்ஸ் சென்றுள்ள தெரசா மே, ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் 27 பேரை சந்தித்து பேச உள்ளார். 

இந்த சூழலில் பிரஸ்சல்சில் தெராசே மே கூறுகையில், “ பிரெக்சிட் ஒப்பந்த விவகாரத்தில் உடனடியாக எந்த திருப்பு முனையையும் தான் எதிர்ப்பார்க்கவில்லை என்றார். மேலும், வரும் 2022 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்பாகவே  தான் பதவி விலக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்